Wednesday, May 20, 2009

மாவீரரும் - நேதாஜியும்



மாவீரரும் - நேதாஜியும்

மாவீரர் ஒரு வீரர் அடையும் உச்சியின் எல்லையை அடைந்துவிட்டார் என்றும், இல்லை என்றும் பலவாறு கருத்துக்கள் வெளியிடப்படும் நிலையில்....

மாவீரர்கள் என்றும் மக்கள் மனதில் இருந்து மறைவதுமில்லை. அழிக்கப் படுவதுமில்லை என்ற உணர்வுடன்,

மாவீரர் என்றும் நம்முடன் இருப்பார், நேதாஜி போல். பணியைத் தொடருங்கள். வெற்றி நமதே.....

”நேதாஜி குறித்து முந்தையப் பதிவுகளிலிருந்து”

1939ல் காந்தியடிகளின் வேட்பாளர் பட்டாபி சீத்தாராமையாவை தோற்கடித்து பேராயக் கட்சியின் தலைவரான நேதாஜி, ஒத்துழையாமையின் காரணமாக தலைவர் பதவியில் விலகி, தனிக் கட்சி கண்டார்.

இரண்டாம் உலகப் போரில் சப்பான், செர்மனியுடன் இணைந்து ஆங்கில ஆட்சிக்கு எதிராக போர்க்குழு அமைத்து இந்தியாவை படையெடுத்து வந்தார். இதன் நிகழ்வாக ஆங்கிலேய அரசின் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப் பட்ட நேதாஜியை, விடுதலை இந்தியா ஆங்கிலேய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு பிரிவு இருப்பதாகப் பெரிதும் பேசப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திரஜித் குப்தா அவர்கள் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்த போதும் கூட, இது குறித்து அரசின் சார்பில் தெளிவான விளக்கம் வெளியிட்டதாகவும் தெரியவில்லை....

இந்திய விடுதலைக்குப் போராடிய ஒரு மாபெரும் இந்தியத் தலைவருக்கு சுதந்திர இந்தியாவில் நேர்ந்த நிலை இது.

அதனால் நேதாஜியின் பங்கு மக்களால் மறக்கப் பட்டதா?

இல்லையே...

தங்கள் நினைவிற்கு எடுத்த வரக் காரணம்,

விடுதலைக்குப் போராடும் வழி எவ்வழியாயினும், மக்கள் மறப்பதில்லை. அதன் தலைவர்கள் மக்கள் நெஞ்சில் என்றும் நீங்கா இடம் பிடிப்பர்.

========

அன்புடன்
.கவி.

1 comment:

.கவி. said...

தன் மக்களைக் காக்கத் தவறும் எந்த நாடும், பிரிவினை-விடுதலைப் போராட்டத்தை எதிர் கொண்டே ஆக வேண்டும், இது இயற்கை நியதி.

Post a Comment