Sunday, August 9, 2009

திறந்தே விட்டனர் திருவள்ளுவர் சிலை பெங்களூரில்!!!!

திறந்தே விட்டனர் திருவள்ளுவர் சிலை பெங்களூரில்!!!!



திராவிட மண்ணில், ஆரிய வழிமுறைக்குப் பெருந்துணை வேண்டிப் போராடும் பாசகவின் ஆட்சியில் திறந்தே விட்டனர் திருவள்ளுவர் சிலை பெங்களூரில்!!!!

பேராயம் பல முறை ஆட்சி கண்ட மண்ணில் திருவள்ளுவர் சிலை திறக்கப் படவில்லை.

தலைவர் கலைஞர், முதல்வர்கள், தமிழக பாசக தலைவர்கள் பாராட்டுக் குறியவர்கள்.



வளர்க திராவிட ஒற்றுமை.

அன்புடன்
.கவி.

Saturday, August 8, 2009

கொலம்பசு தமிழ்ப் பள்ளி - தமிழ் இணையப் பல்கலைக்கழக முதல் சான்றிதழ் தேர்வுகள்.

கொலம்பசு தமிழ்ப் பள்ளி - தமிழ் இணையப் பல்கலைக்கழக முதல் சான்றிதழ் தேர்வுகள்.



கொலம்பசு தமிழ்ப் பள்ளி - தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய முதல் சான்றிதழ் தேர்வுகள் இன்று கொலம்பசு நகரில் நடத்தப் பெற்றது.

ஒரு வருட காலம் கொலம்பஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பள்ளியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் தேர்வு எழுதினர்.

தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளின்படி நடத்தப் பெற்ற தேர்வின் தேர்வாளர்களாக மத்திய செம்மொழிக்குழு எண்பேராய உறுப்பினர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கொலம்பசு தமிழ்ச் சங்க நிர்வாகி முகைதீன் தேர்வாளர்களாகவும், கொலம்பசு தமிழ்ச் சங்க நிர்வாகி மணிவண்ணன், ராஜேஸ்வர் தேர்வு இணைப்பாளர்களாகவும்
பணியாற்றியனர்.



தேர்வு எழுதிய மாணவர்களைப் பாராட்டி தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இடைநிலைக்கான குறுந்தகட்டை தமிழ்ப் பள்ளியின் சார்பில் பெருங்கவிக்கோ வழங்கினார்.



கொலம்பசு தமிழ்சங்கத்தின் தமிழ்ப்பள்ளியில் இணைய விருப்பமுள்ள மத்திய ஒகயோ தமிழ் ஆர்வலர்கள் கொலம்பசு தமிழ்ச் சங்க நிர்வாகி மணிவண்ணன், தலைவர் சரவணன் ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.



அன்புடன்
.கவி.