Thursday, June 4, 2009

ஈழம்:இந்திய அரசின் கவனத்தை திருப்புவோம்:

ஈழம்:இந்திய அரசின் கவனத்தை திருப்புவோம்:

இந்தக் கருத்தைத் தான் பலமுறை தேர்தலுக்கு முன்னும்பின்னும் கூறிப் போராடுகிறோம். (1)

நமது தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு எனில் அது வங்கத்தைப் போல் அமையும் அடக்குமுறை தொடர்ந்தால்.

முதலில் அதற்கு தமிழகம் போல் மொழி வாரியாக இலங்கை அரசினால் ஈழம் பிரிக்கப் பட வேண்டும். இலங்கை அரசின் முதல் பணி அதுவே ஆகும். இன்றைய நிலையில் அது மிகவும் முக்கியம். சிந்தனையை சிதறவிடாமல் இதை நிறைவேற்ற வேண்டும்.

ஈழ உணர்வாளர்கள், தமிழ் மக்களைக் காப்பாற்றுங்கள். இந்திய அரசின் கவனத்தைத் திருப்ப முயலுங்கள்.

“மறதியே மனிதனுக்கு உள்ள மாபெரும் வரப் பிரசாதம்”. இந்திய அரசும், ஈழத்தில் பாதிக்கப்பட்ட தமிழரும் பழையன கழித்து நிகழ்கால நிஜங்களை நினைத்து, எதிர் காலத்தை எம் காலமாக மாற்றப் போராடுவோம்.

வேண்டுகோளுடன்
.கவி.


==================================

அடிக்குறிப்பு

(1)இந்திய அரசின் கவனத்தை திருப்புவோம்:

இந்திய அரசின் உதவியில்லாமல் எம்மால் எதுவும் செய்ய முடியாது என்பது தெரியும். எனவே இந்திய அரசாங்கத்தின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்பும் உறுதியான நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து அந்த வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். சிறிது கால அவசகாசம் தேவைப்படுகிறது. இது குறித்த விபரங்களை தற்போது வெளிப்படுத்த முடியாது.

ராணுவ முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் எங்கள் மக்களைக் காப்பாற்றுவதற்கும், ராணுவத்திடம் பிடிபட்ட போராளிகளை அனைத்துலக சட்ட அடிப்படையில் விசாரிக்கவும் வழி வகை செய்ய வேண்டும். இதுதான் எங்கள் முதல் பணி.

பிளவுகளை மறந்து அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு குடையின்கீழ் அரசியல் தீர்வுக்காக நிற்க வேண்டும். அதுதான் எனது விருப்பம். அதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் எடுத்து வருகிறேன் என்றார் பத்மநாதன்.

No comments:

Post a Comment