Saturday, April 25, 2009

தேர்தல் 2009 : நேற்று - இன்று - நாளை : புரட்சித்தலைவி ஜெயலலிதா

தேர்தல் 2009 : நேற்று - இன்று - நாளை : புரட்சித்தலைவி ஜெயலலிதா கவனத்திற்கு

நேற்று:

நிறைகள் :

1.தமிழகத்தில் திமுகழகத்திற்கு மாற்றுக் கட்சியாக, பல தலைமுறை அரசியல் தலைகள் கண்ட கலைஞக்கே மாற்றாக தமிழக அரசியலில் வலம் வரும் பெரும் சக்தி.

2. தமிழீழ விடுதலைக்காக நவம்பர் 30, 1995 ல் பெருங்கவிக்கோ வா.மு.சே. தலைமையில் தமிழகம் தழுவிய ஈழ ஆதரவு முழு அடைப்புக்கு ஆளுங்கட்சியாக தாங்களும் அதிமுகவும் ஆதரித்தது.

3. தமிழ் பிராமணர்கள் தமிழ்நாட்டில் புறக்கணிப்படுகிறார்கள் என்ற சிலரின் தவறான பொய்ப் பிரச்சாரம் தமிழக மக்கள் தங்களை முதல்வராக்கியதன் மூலம் முறியடிக்கப் பட்டது.

4. சரியென்று பட்டதை செய்து முடிக்கும் துணிவு.


குறைகள் :

1. மொழியை விட மதம் பெரிது என்பது போல் தங்களின் சில நிலைப் பாடுகள்.

2. பட்டறிவு மிகுந்திருந்தும், பகுத்தறிவை ஒதுக்குவது.

3. சேதுக் கால்வாய் திட்டத்திற்குத் தங்களின் திடீர் எதிர்ப்பு, தேர்தலுக்கு மட்டும் எனில் சரி. ஆனால் நம் மண்ணின் வளர்ச்சிக்கு எனில் அதை நாம் ஆதரிக்கத் தானே வேண்டும்.

4. மக்களுக்கும் தங்களுக்கும் இடையில் தேவையற்ற இடைத் தரகர்களுக்கு இடம் கொடுத்தல்.

இன்று:

குறைகள்

1. பக்தியில் பெரும் ஈடுபாடு கொண்ட தாங்கள் முதல்வராயிருந்தும் நம் அன்னைத் தமிழ் இன்றும் கோயில் கருவறையை எட்டாமை.

2. தமிழ் உணர்வே முதல் என்ற நிலைப்பாடு தங்களிடம் இன்னும் இடம் பெறாமை.

3. மக்களின் உணர்வுகளைத் தங்களிடன் சரியாக எடுத்துரைக்காத தலைகள்.

4. தங்களை விட வயதில் பெரியவர்களும் காலில் விழுந்து தங்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த்தும் விபரீதம். ஆசி பெறுவது உடன்பாடே, ஆனால் தங்களை விடப் பெரியவர்களும் தங்களிடம் ஆசி பெறுவது தவறு தானே?

நிறைகள்:

1. தவறென்றால், ஆச்சாரியர்களையே எதிர்க்கும் தங்கள் துணிவு.

2. ஒரு சில பதவிகளுக்காக தங்களை மீண்டும், மீண்டும் தேடி அடையும்
தமிழகக் கட்சித் தலைகள்.

3. தனித் தமிழ் ஈழம் என்ற கொள்கையில் தங்களின் இன்றைய நிலைப்பாடு.

பக்தியில் திளைத்த தாங்கள், நம் ஆலயங்களில் அன்னைத் தமிழை ஏற்றுங்களேன்.

நம் தமிழ் மண்ணில் உள்ள ஆலயங்களில் ஆரிய மொழி, அன்னைத் தமிழுக்கு அடுத்த நிலை தான் என்ற நிலையை உருவாக்குங்களேன்.

நம் மொழி காக்கும் பெரும் பொறுப்பை நீங்களும் ஏற்றுச் செயல்பட்டீர்கள் என வரலாற்றில் அறியப் படுவீர்கள் தானே.

உடன் செயல் படுங்களேன்....

சிந்திப்பீர்கள். செயல் படுவீர்கள் என்று நம்பும்

பக்தித் தமிழன்
.கவி.

No comments:

Post a Comment