Sunday, April 26, 2009

தேர்தல் 2009 : நேற்று - இன்று - நாளை : சோனியா, பிரியங்கா, ராகுல்

தேர்தல் 2009 : நேற்று - இன்று - நாளை : சோனியா, பிரியங்கா, ராகுல்

சோனியா, பிரியங்கா, ராகுல் கவனத்திற்கு

நேற்று:

நிறைகள் :

1. இந்திய விடுதலையில் பெரும் பங்காற்றிய மோதிலால், ஜவகர்லால்.
2. வங்க விடுதலையில் பெரும் பங்காற்றிய இந்திரா, தமிழீழ விடுதலையில் தனிக் கவனம் கொண்டவர்.
3. தமிழர் நலனில் அக்கறை கொண்டதனால், சிங்கள வெறி ராணுவத்தினரால் தாக்கப் பட்ட ராஜீவ்

குறைகள் :

1. கச்சத்தீவை இலங்கைக்கு இலவசமாக அளித்தல்.
2. தமிழரின் ஆதரவின்றி, அதிகார வர்க்கத்தினால் உண்மை நிலை அறியாமல் திணிக்கப் பட்ட ஒப்பந்தம்.
3. அமைதிப் படையின் அத்து மீறல்களால் தமிழக மண்ணின் துயரத்தை முழுமையாக அறியாமை.
4. உணர்ச்சி மிகுதியால் பாதிக்கப்பட்ட சில தமிழர்களின், தவறான முடிவால் பாதிப்பு.

இன்று:

குறைகள்:

1. ராஜிவை இழந்த துயரத்தை ஈடு கட்ட, தமிழரை அழிக்கத் துணை போகின்றீர்கள் என்ற குற்றச்சாட்டு.

2. இந்திய ராணுவம் இலங்கை ராணுவத்துடன் இணைந்து தமிழர்களை கொத்துக் கொத்தாக கொலை செய்கின்றனர் எனப் பல புகைப் படங்கள்/ காணோளிகள்.

3. தமிழர் சிக்கல் அறியாத அதிகார வர்க்கத்தின் தவறான வழிநடத்தல்.

4. இலங்கை அரசின் ஈவு இரக்கமற்ற மனிதக் கொலைகள்.

5. ஈழ நிலையை தங்களிடம் தவறாக விளக்கிய அல்லது விளக்கவே தைரியமற்ற தமிழகக் காங்கிரஸ் தலைகள்

நிறைகள்:

1. தமிழர் விடுதலையில் ஆதரவு, நட்புணர்வு

2. பல ஆயிரம் தமிழ் மக்கள் / ஈழ மக்கள் இந்தியாவின் உதவிக் கரம் தங்களின் இன்னுயிரைக் காக்கும் என இன்னும் நம்பி நிற்கும் ஏக்கம்.

3. தமிழக அரசியலில் அதிமுக, பாஜக, கம்யூணிஸ்ட் என அனைத்துக் கட்சிகளும் ஈழ விடுதலைக்கு ஆதரவுக் கரம்.

நாளை:

1. ராஜிவை இழந்த பாவத்திற்காக, ஒரு இன அழிவைத் தடுக்கத் தவறிய பெருங் குற்றத்திற்கு ஆளாக நேரிடும் பெரும் அபாயம்.

2. இந்திய ராணுவம் பங்கு கொண்டு தமிழ் மக்களை அழிக்கின்றது என்பதை இதுவரை ஆதாரத்துடன் மறுக்காதது ,எதிர்காலத்தில் தங்களின் விடுதலைப் பரம்பரைக்கு பேரிழுக்கு.

இந்த இழுக்கை நாளைய வரலாற்றில் இடம் பெறாமல் தடுக்கும் பொறுப்பு தங்களுக்குள்ளது தானே....

தேர்தலில் வெற்றி தோல்விகள் மாறலாம், ஆனால் தங்களின் இக்கால நிலைக்கு வரலாறு எவ்வாறு தங்களை நோக்கும்?

ஆயிரக்கணக்கான மக்களின் இரத்தம் குடிக்கும் அழிவைத் தடுக்காமல், நீங்கள் வாய் மூடி மௌனியாக இருந்தீர்கள் என வரலாறு கூறுவதைத் தவிர்க்கும் வாய்ப்பு இன்னும் உள்ளதே.

தான் பாதிக்கப் பட்டாலும், மனித இனத்தைக் காக்கும் பெரும் பொறுப்பை ஏற்றுச் செயல்பட்டீர்கள் என வரலாற்றில் அறியப் படுவீர்கள் தானே.

உடன் செயல் படுங்களேன்....

சிந்திப்பீர்கள். செயல் படுவீர்கள் என்று இன்னும் நம்பும்

இந்தியத் தமிழன்
.கவி.

No comments:

Post a Comment