Monday, April 6, 2009

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் திருக்குறள் செம்மொழி உரை


நன்றி -விடுதலை

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் திருக்குறள் செம்மொழி உரை நூல் வெளியிட்டு, தமிழர் தலைவர் சிறப்புரை

சென்னை, பிப். 10- பெருங் கவிக்கோ வா.மு.சேதுராமனின் திருக்குறள் செம்மொழி உரை நூலை தமிழர் தலைவர் வெளியிட்டு, இந்நூலை, வாழ்வியல் கருத்துரை நூலாக எடுத்துக் கொள்ள வேண்டும் என சிறப்புரையாற்றினார்.

நேற்று (9.2.2009) மாலை சென்னைப் பல்கலைக்கழகம் (விரிவு) பவள விழாக் கலை அரங்கில், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில், பெருங் கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் எழுதிய திருக்குறள் செம்மொழி உரை நூல் வெளி யீட்டு விழா நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக திருமதி வாசுகி கண்ணப்பன், கவிமுரசு வா.மு.சே. திருவள்ளு வர் ஆகியோர் வரவேற்புரை யாற்றினர். சிலம்பொலி செல் லப்பனார் தலைமை தாங்கி னார். சென்னை முன்னாள் மேயர் சா.கணேசன் முன்னிலை வகித்தார். முனைவர் மறை மலை இலக்குவனார் தொடக்க உரையாற்றினார்.

பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமனின் திருக்குறள் செம்மொழி உரை உள்ளிட்ட மூன்று நூல்களை, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுப் பேசியதாவது:

பெரியார் பெருந்தொண் டன் என்ற முறையில் இந் நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். திருக்குறளைப் பரப்ப வேண்டும் என்று தந்தை பெரியார் சொல்லியிருக்கின்றார்.

தமிழக வரலாற்றில் புத்தர், திருவள்ளுவர், தந்தை பெரியார் ஆகியோர் அறிவைச் சொல் லிக் கொடுத்தவர்கள். எந்த நூலாக இருந்தாலும் சமு தாயத்தை மாற்றக் கூடியதாக இருக்க வேண்டும்.

பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமனின் திருக்குறள் செம்மொழி உரை நூல், வாழ்வியல் கருத்துரை நூலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


வா.மு.சேதுராமன் அவர்கள் நல்ல உடல் நலத்துடன் பல் லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்று தமிழர் தலைவர் இந் நூலை வெளியிட்டு வாழ்த் துரை வழங்கினார்.

முன்னதாக இந்நூலை தமிழர் தலைவர் வெளியிட, ஆ.சந்திரசேகர், கவிஞர் புரட்சிதாசன், பொன் இராசேந் திரன், புலவர் பி.துரைசிங்கம், புலவர் செந்தமிழ்ச் செழியன், சரஸ்வதி, வாசுகி கண்ணப்பன் மற்றும் பலர் பெற்றுக் கொண் டனர்.
இந்நூல் வெளியீட்டு விழா வில், பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ச.முத்துக்குமரன், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் பேரா சிரியர் முனைவர் அ.இராம சாமி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன பொறுப்பு அலுவலர் முனைவர் க.இராம சாமி, முனைவர் மின்னூர் சீனிவாசன், புலவர் செந்தமிழ்ச் செழியன், முனைவர் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

நூல் வெளியீட்டு விழா தொகுப்புரையை நிலவு முத் துக்கிருட்டிணன் வழங்கினார். கவிஞர் கண்மதியன் நன்றியுரை கூறினார். தமிழக நூலக ஆணைய குழுத் தலைவர் கயல் தினகரன், டாக்டர் மு.அக்பர், புலவர் சி.சங்கரலிங்கம், சி. செங்குட்டுவன், பெரியார் மாணாக்கன், மடிப்பாக்கம் ஜெயராமன், செங்கை பூபதி, உடுமலை வடிவேலு, செம் மொழித் துறை உறுப்பினர் அரண முறுவல் அகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


நன்றி -விடுதலை

1 comment:

தேவன் மாயம் said...

தமிழக வரலாற்றில் புத்தர், திருவள்ளுவர், தந்தை பெரியார் ஆகியோர் அறிவைச் சொல் லிக் கொடுத்தவர்கள். எந்த நூலாக இருந்தாலும் சமு தாயத்தை மாற்றக் கூடியதாக இருக்க வேண்டும்.//

நல்ல கருத்து!!!நிச்சயமாக!!

Post a Comment