Sunday, April 10, 2011

தமிழகத் தேர்தல் 2011 - ஈழம்-1

தமிழகத் தேர்தல் 2011 - ஈழம்-1

இந்தத் தேர்தலில் ஈழத்தமிழருக்கு பேராயக் கட்சித் தலைவர் சோனியாவின் உரை இங்கே.

சோனியாவின் உறுதிமொழி(ஒலிப்பதிவு)

என் நினைவு தெரிந்தது முதல் நம்முடனே வளரும் ஈழச் சிக்கலுக்கு இன்று வரை ஒரு முடிவில்லை.

2009ல் ஈழப் போரில், இந்தியாவின் நிலை அனைத்துத் தமிழ் நெஞ்சங்களின் உள்ளத்தையும் பாதித்தது.

2009 பாராளுமன்றத் தேர்தலில் அது எதிரொலித்ததை பேராயக் கட்சி மறக்க இயலாது.

2009 ஈழப் போருடன் உணர்வுகள் மங்கும் என்று எண்ணியவர், வியக்கும் அளவிற்கு ஈழ விடுதலை உணர்வு பன்மடங்கு பெருகியது.

உங்களுடன் இணைந்து மனவலிக்கு மருந்து தேடுவது மட்டுமல்லாமல், ஈழத்தில் வாழும் மக்களுக்கு ஓர் நல்வழி அளிக்கும் கடமையும் நமக்குண்டு என்பதை மறவாதீர்கள்.

இன்றைய அரசியல் நிலையில் இந்திய அரசைச் சார்ந்தே நாம் நம் ஈழத்தமிழ் மக்களுக்கு உரிமை பெற இயலும்.
சோனியாவின் உறுதிமொழி(ஒலிப்பதிவு)

பல்வேறு சிக்கல்களுக்கு பாராளுமன்றத்தை இயங்கவிடாமல் செய்த கம்யூனிஸ்ட், பாசக, அதிமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள், ஈழச் சிக்கலுக்கு என்ன செய்தனர் என்பதை எண்ணிப் பாருங்கள்.

நமது சிந்தனையைத் தொடர்வோம்....


நட்புடன்
.கவி.

No comments:

Post a Comment