Monday, April 11, 2011

தமிழகத் தேர்தல் 2011 - காரியமும் முடிந்தது. இனிக் காரியத்தில் ஈடுபடுங்கள் : அண்ணன் வைகோ

தமிழகத் தேர்தல் 2011 - காரியமும் முடிந்தது. இனிக் காரியத்தில் ஈடுபடுங்கள் : அண்ணன் வைகோ

அன்று வேலூர்ச் சிறையில் அடைத்து முடக்கினார். இன்று வீட்டினுள் அடைத்து முடக்கினர்.


மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பது முதுமொழி.

அண்ணன் வைகோவை ஐந்து வருடங்கள் பயன்படுத்தி, பலன் பெறும் நேரத்தில் வெட்டிச் சாய்த்தார்.

ஒட்டாத மெர்க்குரியாகவே அண்ணன் வைகோவைப் பயன்படுத்தினார் என்பதை நம்மைப் போல் பலர் அறிந்தும், கூடா நட்பு செய்த கொடுமையின் காரண் இன்று தனி மரமாக்கப்பட்டார்.

ஓரிரண்டு இடத்திற்காக அணி மாறிய வைகோவை ஓரிலக்க இடம் தருவதாகக் கூறி, இயக்கத்தையே குலைக்கப் பார்த்தார் அம்மையார்.

அண்ணன் வைகோ பெற்ற அவமானத்திற்குச் சன்மானம் செல்வி செயலலிதாவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதா?

மதிமுக உடன்பிறப்புக்கள் சிந்திக்க வேண்டும்.

அண்ணன் வைகோவின் வாசகங்களில் “ஆணவப் போக்கிற்கு” என்ன அடி நீங்கள் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்.

உங்களை ஒதுக்கியவருக்குப் புத்தி புகட்டுங்கள்.



கலைஞர் அணி வெற்றி பெறுவதன் மூலம், உங்களை ஒதுக்கியது இமாலயத் தவறு என்பதை உணர வையுங்கள் உடன்பிறப்புக்களே.

காரியம் முடிந்தது. இனிக் காரியத்தில் ஈடுபடுங்கள். புறப்படுங்கள் வாக்குச்சாவடிக்கு.

நட்புடன்
.கவி.

No comments:

Post a Comment