தமிழகத் தேர்தல் 2011 - யாருக்கு வாக்கு? - 2
நண்பர்களே
பாரபட்சம் இல்லை, என்று தேர்தல் ஆணையம் ஒரு புறம். பாரபட்சம் உள்ளது போல் செய்தி ஏடுகளில் வெளிவரும் செய்தி மறுபுறம். நிச்சயம் தேர்தலுக்குப் பின் ஆய்வு செய்ய வேண்டிய ஒன்று.
பாரபட்சமின்றி வெளியிடப்படும் கருத்துக் கணிப்புக்களில் பாமகவிற்கு 7 எண்ணிக்கை மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.
திமுகவிற்கு 70 இடங்கள் என்ற கணிப்பு உண்மை என்று எடுத்துக் கொண்டால், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் இணைந்து ஐம்பது தொகுதிகள் எடுத்தாலே கலைஞர் முதல்வர், விகடன் கருத்துக் கணிப்பின் படி.
எனவே தோழமைக் கட்சிகள் வி.சி.,பா.ம.க., கொ.மு.க. நிதானத்துடன் ஆதரித்து நூற்றுக்கு நூறு வெற்றி பெறச் செய்தல் அவசியமாகிறது.
பாமகவின் தமிழ் உணர்வில் நம்பிக்கை இல்லாத தமிழர் இருப்பது சற்றே கடினம்.
தமிழ் உணர்வு முதன்மை யெனில் திமுகழகம், விடுதலைச் சிறுத்தைகளைத் தொடர்ந்து பாமக பங்கு வகிக்கும் என்பதில் ஐயம் இருக்காது.
ஆக தமிழ் / தமிழர் என்ற உணர்வு செழிக்க வேண்டுமெனில் பாமகவிற்கு ஆதரவு தருவதும் அவசியமாகிறது.
சிந்திப்பீர். செயல்படுவீர்.
நட்புடன்
.கவி.
Monday, April 11, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment