Saturday, May 30, 2009

நல்லற இடுகைகள்: வள்ளுவத்தில் நல்லறம் - 1

நல்லற இடுகைகள்: வள்ளுவத்தில் நல்லறம் - 1

அற நூல்கள் அறிவுறுத்துவது, தவறு செய்யாதே என.

அறிந்தே சிலர் செய்யும் தவறுகளை நாம் கண்டிருப்போம். மீண்டும் மீண்டும் செய்வதையும் கண்டோம்.

நம் வாழ்விலாகட்டும், நடந்து முடிந்து தேர்தலில் ஆகட்டும், மாபெரும் தவறு இழைத்தவர்கள், இனியேனும் தவறு இழைக்க லாகாது.

பின்னர் வருத்தப்பட நேரிடும் தவறைச் செய்யாதீர்கள், தவறித் தவறு நேரின், மீண்டும் தவறாதீர்கள் என்பது வள்ளுவர் வாக்கு.

”எற்(று)என்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று” (66-5)

” தான் செய்தது மாபெரும் தவறு” என்று எண்ணும் தவறினை ஒருவன் ஒருபோதும் செய்வதாகாது. செய்யநேரினும், அதுபோன்ற தவறுகளை மென்மேலும் செய்வதையாவது நிறுத்த வேண்டும்

-(பெருங்கவிக்கோ செந்தமிழ் உரை)

அடிக்குறிப்பு

1. எற்று -> கடந்த காலத்தை எண்ணி வருந்துதல்
2. இரங்குவ -> மனம் வருந்தல்
3. மற்றன்ன -> மீண்டும்

No comments:

Post a Comment