Monday, May 25, 2009

தரமிழந்த தமிழ் இணையம்: தேர்தல் 2009 : அலசல் - 9 ஃபீனிக்ஸ் நம் திமுக - 24:

தரமிழந்த தமிழ் இணையம். ஃபீனிக்ஸ் நம் திமுக - 24 : தேர்தல் 2009 : அலசல் - 9

பண்பற்ற பதிவுகள், பின்னூட்டல்கள்.

தரமற்ற தமிழ்ப் பதிவுகள்.

இவை தான் தேர்தல் 2009ல் தமிழ் இணையத்தின் நிலை.

பல குழுமங்கள், பதிவுகள் எல்லாவற்றிலும் இதே இழிவு நிலை.

ஒரு சில தமிழ் உணர்வுத் தமிழர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும் தவறவில்லை என்ற சிறு ஆறுதல்.

http://kavise.blogspot.com/2009/05/1.html?showComment=1242285780000#c487385520026199653

“தமிழ் -> தமிழர் => தமிழினம் =>> பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் - 1 பதிவில் மே 14 அன்று”

”மறைமலை உன்னைப் பற்றி நிறையச் சொன்னார்.உலக அரங்கில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் மொழிக்காகவும் இனத்துக்காகவும் நிறையச் சிந்தித்து எழுதுவதும்,கலைஞர் அவர்களின் பணியினை உலகறியச் செய்வதும் உச்சிமேற்கொண்டு பாராட்டப்பட வேண்டிய பணி என மறைமலை தெரிவித்தார்.நான் மிகமகிழ்வு எய்தினேன்.”



http://kavise.blogspot.com/2009/05/15-2009.html?showComment=1242490980000#c5405329958377508175

" என் அன்பான வாழ்த்துக்கள் கவி. தமிழுலகம் குழுமத்திலும் இங்கே தமிழ்மணத்திலும், பண்புடன் குழுமத்திலும் நான் பட்ட கஷ்டம் இந்த 50 நாட்களில் சொல்லி மாளாது. எந்த பதிவை பார்த்தாலும் கலைஞரை ஒருமையில் திட்டியும் குட்டியும் எத்தனை எத்தனை பதிவுகள். என்னால் தாங்க முடியாம திமுக ஆரதவு பதிவு போட ஆரம்பித்தேன்.”


”உங்க பீனிக்ஸ் தொடர் வர ஆரம்பித்தது. செம ரீச் ஆச்சு!”


“அதுபோல உடன்பிறப்பு, லக்கி, சாலிசம்பர், எல்லோருக்கும் என் வாழ்த்துக்களும் நன்றியும்!”


அபி அப்பாவின் கருத்துரை

http://kavise.blogspot.com/2009/05/18-2009-3.html?showComment=1242640380000#c2688675310290944482

திரு. கதிர்வீச்சு தமிழ் உணர்வு குறித்து

”தமிழின உணர்வுக்குப் பங்கம் என்றால் எம் தமிழர் சீறுவர் என்பதற்கும் இந்தத் தேர்தல் முடிகள் சிறந்த சான்றே." நமது கருத்துக்கு

“சரியாகச் சொன்னீர்கள் கவி, திமுகவும் இந்த நிலைபாட்டில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வரும் சட்டமன்ற தேர்தலில் முடிவுகள் இதே போல இருக்காது.என் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது. நன்றி.”

http://kavise.blogspot.com/2009/05/18-2009-3.html?showComment=1242640380000#c2688675310290944482


பல நண்பர்கள் , பல குழுமங்களில் தரமிழந்து கலைஞரை விமர்சித்த நிலையிலும் நிமிர்ந்து நின்று. ” இன நலம் கெட்டால் அங்கு சென்று போராடிய” எம் அன்பர்களுக்கு எமது நன்றி...

அரசியல் என்றால் அது போகட்டும் என்று விட்டு விடலாம்.

தமிழ் உணர்வு என்ற போர்வையில்.

மெத்தப் படித்த தமிழின இணையப் பயனர்கள்(1), சிந்தனையை அடகு வைத்து தன் நிலையில் மிகவும் கீழே சென்று தரம் குறைந்தார் என்றால் அது மிகையல்ல.

தேர்தல் 2009 முடிந்து , அரசமைப்பும் கடைசிக் கட்டத்தில் வந்துவிட்ட நிலையில், இனியேனினும் இது போன்று நம் இனத் தலைவர்களை இழிவாகப் பேசாதீர்கள் / எழுதாதீர்கள் என்று வேண்டினால் அது மிகையா?

அன்புடன்

.கவி.

அடிக்குறிப்பு

1. பயனர் => User

No comments:

Post a Comment