Sunday, May 31, 2009

வேந்தர் இடுகைகள்: வள்ளுவத்தில் வேந்தர் - 2

வேந்தர் இடுகைகள்: வள்ளுவத்தில் வேந்தர் - 2

எது நாடு என்று கருதப் படும்?

புலம் பெயர்ந்தோரையும் வரவேற்றுக் காக்கும் பகுதியே நாடு எனப்படும்.

வந்தாரையும் வாழவையுங்கள் எனும் வள்ளுவம், வாழும் மக்களைக் காக்கத் தவறும் நாடு நாடே அல்ல எனபதனையும் மறை பொருளாக உணர்த்துகின்றது.

மாற்றோரால், வேந்தனுக்கு சில நேரங்களில் ஏற்படும் நிதிச் சுமையையும் ஏற்று, வேந்தனுக்கு உதவிடும் நாடே நல்ல நாடு, அவர்களே நாட்டின் நற்குடிமக்கள் என்பது வள்ளுவர் வாக்கு.

"பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்(கு)
இறைஒருங்கு நேர்வது நாடு”

புலம் பெயர்ந்தோரும் புதுவரவாக வரும்போது அவரையும் ஏற்று, அரசனுக்குரிய ஆட்சி நடைபெற உதவும் வரிப்பொருள்களை ஒழுங்காகச் செலுத்தும் மக்களை உடையதே நாடு.

-(பெருங்கவிக்கோ செந்தமிழ் உரை)

அடிக்குறிப்பு

பொறை -> நிலம்

No comments:

Post a Comment