Wednesday, May 20, 2009

அழிவு ஆட்ட அர்த்தநாரிகள்: ஃபீனிக்ஸ் நம் திமுக - 21: தேர்தல் 2009 : அலசல் -6

ஃபீனிக்ஸ் நம் திமுக - 21: தேர்தல் 2009 : அலசல் -6

அழிவு ஆட்டம் ஆடிய அர்த்தநாரிகள்.

தமிழகமும், ஈழமும் ஒரு ஆர்வத் தமிழனின் உடலின் இரு பாகங்கள்.
உயிரால் தமிழனாகவும்,
தன்னுடலைப் பிரித்து, தமிழகத்தை ஒரு பாகமாகவும், ஈழத்தை மற்றொரு பாகமாகவும் கொண்ட அர்த்த நாரித் தமிழர் இவர்கள்.

இந்த அர்த்தநாரித் தமிழரின் ஒரு கண்ணைக் குத்திக் கிழித்து இரத்தம் வடிவது கண்டு மற்ற கண் கண்ணீர் வடித்துத் துடித்த போது

காக்க வேண்டிய கைகள் எங்கிருந்தன ?
என்ன செய்து கொண்டிருந்தன ?
இந்த இரண்டு கைகளும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.

ஒரு கை மற்றொரு கையின் விரலை ஒடிக்கப் போராடிக் கொண்டிருந்தது.

கண்ணைக் கொத்த வந்தவனை எதிர்க்கவில்லை கைகள்.

தடுக்கவில்லை அதன் விரல்கள்.

மாறாக இடக்கை, வலக் கண்ணையும், வலக்கை இடக் கண்ணையும் கொத்திக் குருடாக்குவதில் மிகவும் முனைப்பாக இருந்தன.

கொல்ல வந்தவனே வியப்படைய கைகள் போரடிக் கொண்டன தங்களுக்குள்.

கொல்ல வந்தவன், என் வேலையை இவர்கள் ஏன் எளிதாக்குகின்றார்?
இவர் என் நண்பனா, பகைவனா என்று புரியாமல் மருட்சியில் விழிக்க, தன்னையே அழித்துக் கொண்டு எதிரிக்குத் துணை போனான் இந்த அர்த்தநாரித் தமிழன்.

உணர்ச்சிக் குவியலாய் உண்மை மறந்து தன்னையே அழிக்க ஏன் துணை போனான் இந்த அர்த்தநாரித் தமிழன்?
இயக்கும் மூளை செயலற்றுப் போனதாலோ?

இரு கைகளில் ஒன்று தமிழகத் தமிழர். மற்றொன்று ஈழத் தமிழர் என்பதை விளக்கவும் வேண்டுமா?
படிப்பினை பெற்றார்களா எம் தமிழர்?
இன்னும் எத்தனை முறை தவறுகளைத் தாங்கும் வலு உள்ளது தமிழ் இனத்திற்கு.
தேர்தல் 2009ல் தமிழன் தமக்குள் பிரிந்து தங்களையே அடித்துகொண்டு, ஈழப் போருக்கு அர்த்தநாரித் தமிழனே பெரும் தடையானான் என்றால் அது மிகையல்ல.

ஈழச் சிக்கலில் கவனத்தை விடுத்து, தமிழக அரசியலில் நாட்டம் கொண்டு, கவனத்தைத் தமிழக அரசியல் பக்கம் திருப்பியதனால் தான் நான்காம் ஈழ விடுதலைப் போர் இழப்பில் முடிந்தது என்றால் அது மிகையா?

துயருடன்
.கவி.

No comments:

Post a Comment