Sunday, May 31, 2009

வேந்தர் இடுகைகள்: வள்ளுவத்தில் வேந்தர் - 1

வேந்தர் இடுகைகள்: வள்ளுவத்தில் வேந்தர் - 1

நாட்டின் வேந்தன், வீட்டின் வேந்தன், படையின் வேந்தன், தொழிலின் வேந்தன் என்று எந்த வேந்தனாயிருந்தாலும் வள்ளுவத்தில் அவர்களுக்கும் அறம் உள்ளது.

வேந்தன் காலம் அறிந்து செயல் பட வேண்டும். காலம் அறிந்து பகைவரை வெல்ல வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு

“பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது” (49-1)

பகலில் கண் தெரியாத கோட்டானைக் காக்கை வென்றுவிடும். அதுபோலப் பகைவரை வெல்ல எண்ணும் வேந்தர்கள் காலம் அறிந்து கருதியதை முடிக்க வேண்டும்.

-(பெருங்கவிக்கோ செந்தமிழ் உரை)

அடிக்குறிப்பு
கூகை - கோட்டான் (பெரிய ஆந்தை)
இகல்- இரவு
பொழுது - காலம்.

No comments:

Post a Comment