Saturday, May 30, 2009

நல்லற இடுகைகள்: வள்ளுவத்தில் நல்லறம் - 2

நல்லற இடுகைகள்: வள்ளுவத்தில் நல்லறம் - 2

பொய், பொய்யர், பொய்மை.

தான் வாழப் பொய்.

தன் வழி பற்றும் பொய்யர்களைக் காக்கப் பொய்.

தன் வாழ்வை மட்டும் வளப்படுத்த, பொய்மை என்று அறிந்தும் மனம் கசங்கமால், பேசும், எழுதும், பொய்யர், புறம் பேசுவோர்.

புறங்கூறும் இந்தப் பொய்மை நல்லறமல்ல என்று அறிந்தும் பொய்யர்களாக வாழ்வது வீண் என்பது வள்ளுவர் வாக்கு.

”புறம்கூறிப் பொய்த்(து)உயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்”

வாழ்வுக்காகப் பிறரைப் பற்றி இழிவாகத் தூற்றிப் பொய்யான வாழ்வு வாழ்வதை விட, உண்மைக்காக செத்து மடிவது அறத்தின் பாற்படும். (19-3)

-(பெருங்கவிக்கோ செந்தமிழ் உரை)

அடிக்குறிப்பு

1. புறம்கூறல் => பிறரை இழிவாகப் பேசல் (அவர் அறியாமல்),

No comments:

Post a Comment