Friday, May 22, 2009

மக்களாட்சியா? மன்னராட்சியா? : ஃபீனிக்ஸ் நம் திமுக - 23: தேர்தல் 2009 : அலசல் - 8

மக்களாட்சியா? மன்னராட்சியா? : ஃபீனிக்ஸ் நம் திமுக - 23: தேர்தல் 2009 : அலசல் - 8

அரசியல் களத்தில் உறவினர்களின் பங்கேற்பு உலகளவில் தவிர்க்க இயலாததாகியுள்ளது..

வேறு தகுதியானவர் இல்லையா? ஏன் தம் உறவினர்க்கே அளிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

நியாயமா, நேர்மையா என்று வாதிடுவது இந்த இடுகையின் நோக்கமல்ல.

யார் தவறு என்பதை விட, என்ன நிஜம் என்பதை உணர்த்துவதே இடுகையின் நோக்கம்.

திமுகவை மட்டும் குறை காணும் சில நண்பர்களின் பார்வைக்கு இந்த இடுகை.

எனக்குத் தெரிந்த சில “உறவு அரசியல்கள்” கீழே.

முடிவு தங்களின் பகுத்தறிவுக்கு.

அமெரிக்கா :

ஜார்ஜ் டபிள்யூ. புஷ் (43 வது தலைவர்-மகன்) ஜார்ஜ் புஷ் (41-தந்தை)
பெஞ்சமின் ஃகாரிசன்(23 - பேரன்) வில்லியம் ஃக்ன்றி ஃகாரிசன்(9-தாத்தா)
ஜான் குயின்சி ஆடம்ஸ் (6-பேரன்) ஜான ஆடம்ஸ்( 2 - தாத்தா)

ஃபிராங்கிளின் டெலினோ ரூஸ்வெல்ட், தியோடர் ரூஸ்வெல்ட் பங்காளிகள்
ஃபிராங்கிளின் டெலினோ ரூஸ்வெல்ட் 11 குடியரசுத் தலைவருக்கு உறவு.

ஜேம்ஸ் மேடிசன்(4), ஃஜச்சாரி டெய்லர் (12) பங்காளிகள்

இது தவிர

ஹில்லாரி கிளிங்டன், பில் கிளிங்டன் என ..

ஜெப் புஷ் ஃபுளொரிடா கவர்னராக...

இந்தியாவில்

மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி,சஞ்சய் காந்தி, ராசிவ் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா, ராகுல், மேனகா, வருண், பிரியங்கா பிள்ளைகள் வரை .....

ராமதாஸ், அன்பு மணி

எம்.ஜி.ஆர், ஜானகி ராமச்சந்திரன்.

(ஜெயலலிதா)சசிகலா, தினகரன் ,நடராசன், இளவரசி.... என.....

இந்திய அரசியலில் வாரிகள் பற்றி வெளிவந்த கட்டுரை கீழே (1)

வாரிசு அரசியல் உலகம் முழுவதும் இருக்கின்றது என்றால் மிகையல்ல.

தகுதியுள்ள வாரிசுகள் அரசியலில் மக்கள் மதிப்புடன் வருவது தவறாகாது என்றால் அது மிகையா?

அன்புடன்
.கவி.
அடிக்குறிப்பு:

1. பத்திரிக்கைச் செய்தி (தேர்தல் 2009 ல் வெளிவந்தது):
இந்திய அரசியலில் வாரிசுகளின் ஆதிக்கம் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகி விட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களின் வாரிசுகள் தலையெடுக்க துவங்கி விட்டனர். கட்சியின் தலைமை பதவியில் உள்ளவர்கள் துவங்கி, சாதாரண கிளைச் செயலர் வரை தங்களின் வாரிசுகள் அரசியலில் முக்கியத்துவம் பெற வேண்டும் என நினைப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. வாரிசுகளும் தங்களுக்கு என ஒரு தனியான ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கி, கட்சியில் தங்களின் செல்வாக்கை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் குடும்ப அரசியல் எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதை பார்ப்போம்.

மகாராஷ்டிரா: நாட்டிலேயே குடும்ப அரசியல் அதிகம் கொடி கட்டி பறப்பது மகாராஷ்டிராவில் தான். சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே கட்சியின் நிர்வாக தலைவராக உள்ளார். பால் தாக்கரேயின் உறவினரான ராஜ் தாக்கரே மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவராக உள் ளார். பால் தாக்கரேயின் உறவுப் பெண் ஷாலினி, மகாராஷ் டிரா நவநிர்மாண் சேனா சார்பில் மும்பை வட கிழக்கு தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிடவுள்ளார். காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் சகோதரர் திலீப், மகாராஷ்டிர மாநில அமைச்சராக உள்ளார். தேஷ்முக்கின் மகன் அமித், லோக்சபா தேர்தலில் லடூர் தொகுதியில் போட்டியிடுவதில் ஆர்வமாக உள்ளார். மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா மகன் மிலிந்த் தியோரா தெற்கு மும்பை தொகுதி எம்.பி.,யாக உள்ளார். முதல்வர் அசோக் சவானின் சகோதரர் பாஸ்கர ராவ் கட்கோன்கர், நந்தேப் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் முன்னாள் எம்.பி.,யும் நடிகருமான மறைந்த சுனில் தத்தின் மகள் பிரியா தத், தற்போது எம்.பி.,யாக உள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். தற்போது லோக்சபா தேர்தலில் அவர் களம் இறக்கப்பட்டுள்ளார். சரத் பவாரின் உறவினரான அஜித், மாநில அமைச்சராக உள்ளார். பா.ஜ.,வை பொறுத்தவரை பிரமோத் மகாஜனின் மறைவுக்கு பின் கட்சியில் சேர்ந்த அவரது மகன் ராகுல் மகாஜன் போதை வழக்கில் சிக்கி செல்லாக் காசாகி விட் டார். அதற்கு பின் பிரமோத்தின் மகள் பூனம் அரசியல் களத்தில் குதித்தார். கட்சியின் மாநில இளைஞர் அணியில் அவருக்கு முக்கிய பொறுப்பு தரப்பட்டுள்ளது.

ஆந்திரா: ஆந்திராவிலும் குடும்ப அரசியலுக்கு பஞ்சம் இல்லை. காங்கிரசை பொறுத்தவரை முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், தொழில் அதிபருமான ஜகன் மோகன் ரெட்டி முதல் முறையாக கடப்பா லோக்பா தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் மகள் புரந்தரேஸ்வரி விசாகப்பட்டினம் லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது கணவர் வெங்கடேஸ்வர ராவ் பரச்சூர் சட்டசபை தொகுதியின் வேட்பாளர். மத்திய அமைச்சர் பனபகா லட்சுமி பாபத்லா லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது கணவர் கிருஷ்ணய்யா கூடூர் சட்டசபை தொகுதியில் களம் இறங்குகிறார். குறிப்பாக, தற்போது மாநில அமைச்சர்களாக உள்ள பலர் தங்களது வாரிசுகளுக்கு சீட் கேட்டு காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை தொடர்ந்து அணுகி வருகின்றனர். ஆந்திராவை பொறுத்தவரை காங்கிரசிலும் சரி, தெலுங்கு தேசம் கட் சியிலும் சரி, மறைந்த என்.டி.ஆரின் குடும்பம் தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தெலுங்கு தேசம் கட்சிக்காக தற்போது என்.டி.ஆரின் வாரிசுகள் பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர்., ஆகியோர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

மத்திய பிரதேசம்: இந்த மாநிலத்தில் மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங் வாரிசுகள் அரசியல் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். செல்வாக்கு மிக்க காங்கிரஸ் தலைவரான அர்ஜுன் சிங்கிற்கு தற்போது வயதாகி விட்டது. இதனால், வாரிசுகளை ஆளாக்கி விட வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போதைய தேர்தலில் சத்னா தொகுதியில் தனது மகள் பீனாவையும், சித்தி தொகுதியில் மகன் அஜயா சிங்கையும் களம் இறக்கி விட வேண்டும் என்ற முடிவுடன் உள்ளார். காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவின் மகன் ஒமர் அப்துல்லா முதல்வராக உள்ளார். காஷ்மீரில் புகழ் பெற்ற மற்றொரு அரசியல் குடும்பமும் உள்ளது. மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முப்தி முகமது சயீதின் குடும்பம் தான் அது. சயீதின் மகள் மெக பூபா முன்னாள் முதல்வர். தற்போது எம்.எல்.ஏ., வாக உள்ளார்.

பீகார்: இங்கு, ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் குடும்பத்துக்கு அரசியலில் முக்கிய இடம் உண்டு. இவரது மனைவி ரப்ரி தேவி பீகாரின் முன்னாள் முதல்வர். ரப்ரியின் சகோதரர் சாது யாதவ், லோக்சபா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு தாவியுள்ளார்.

பஞ்சாப்: இந்த மாநிலத்தை பொறுத்தவரை ஆளும் கட்சியான சிரோமணி அகாலி தள தலைவரும், மாநில முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான அமரீந்தர் சிங் ஆகியோரின் குடும்பங்கள் தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பிரகாஷ் சிங் பாதலின் மகன் சுக்பீர் சிங் மாநிலத்தின் துணை முதல்வராக உள்ளார். பாதலின் மருமகள் ஹர்சிம்ரத் சிங் கவுரும் லோக்சபா தேர்தலில் களம் இறக்கப்பட்டுள்ளார். காங்கிரசை பொறுத்தவரை அமரீந்தர் மனைவி பிரினீத் கவுர், மகன் ரணீந்தர் சிங் ஆகியோர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

சட்டீஸ்கர்: இந்த மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன் செல்வாக்குமிக்க அரசியல்வாதியாக இருந்தார். தற்போது உடல் நலக்குறைவு காரணமாக அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. இதனால், கட்சியின் பொறுப்புகள் அனைத்தும் அவரது மகன் துர்கா சோரன் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. கட்சியின் பொதுச் செயலர் அவர் தான். காங்கிரஸ் தரப்பில் அஜித் ஜோகி தான் மக்கள் செல் வாக்கு உள்ள தலைவர். இவரது மனைவி ரேணு, தற்போது கோட்டா சட்டசபை உறுப்பினராக உள்ளார். லோக்சபா தேர்தலில் பிலாஸ்பூர் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

கேரளா: இங்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வருமான கருணாகரனின் குடும்பம் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது. கருணாகரனின் மகன் முரளிதரன், மகள் பத்மஜா ஆகியோர் தீவிர அரசியலில் உள்ளனர்.

கர்நாடகா: இங்கு முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் குடும்பத்திற்கு முக்கிய வேலையே அரசியல் தான். முன்னாள் முதல்வரும், தேவ கவுடாவின் மகனுமான குமாரசாமிக்கு மாநில அரசியல் போரடித்து விட்டது. இதனால்,லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரல் தொகுதியில் களம் இறங்கியுள்ளார். இவரது மனைவி அனிதா ஏற்கனவே எம்.எல்.ஏ.,வாக உள்ளார். தேவகவுடாவின் மற்றொரு மகனான ரேவன்னா மதச் சார்பற்ற ஜனதா தள கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளார்.

தமிழகம்: தி.மு.க., தலைவரும், முதல்வருமான கருணாநிதியின் மகன் ஸ்டாலின் மாநில அமைச்சராக உள்ளார். முதல்வரின் மகள் கனிமொழி ராஜ்ய சபா எம்.பி.,யாக உள்ளார். முதல்வரின் மற்றொரு மகன் அழகிரி, வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதாக பேச்சு அடிபடுகிறது. பா.ம.க., தலைவர் ராமதாசின் மகன் அன்புமணி மத்திய அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்தவர். ஐ.மு., கூட்டணியில் இருந்து பா.ம.க., விலகியதை அடுத்து, சில தினங்களுக்கு முன் தான் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரசில் மறைந்த தலைவர் மூப்பனார் மகன் வாசன் தற்போது மத்திய அமைச்சராக உள்ளார்.

உத்தரபிரதேசம்: இந்தியாவுக்கு அதிகமான பிரதமர்களை உருவாக்கி கொடுத்தது உ.பி., மாநிலம் தான். தற்போது, இங்கு ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அமேதியில் அவரது மகன் ராகுலும் களத்தில் நிற்கின்றனர். சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் மெயின்புரி லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது மகன் அகிலேஷ் யாதவ் பொரோசாபாத் தொகுதி வேட் பாளர். முலாயமின் உறவினர் தர்மேந்திரா யாதவ் புடாவோன் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார். ராஷ்டிரிய லோக்தள கட்சி தலைவர் அஜித் சிங் பாக்பட் தொகுதியிலும், அவரது மகன் ஜெயந்த் சவுத்ரி மதுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். பா.ஜ.,வை பொறுத்தவரை மறைந்த சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா, அவோன்லா தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது மகன் வருண் பிலிபிட் தொகுதியில் களம் இறங்கியுள்ளார்.

No comments:

Post a Comment